அறநெறிச்சாரம்

 முனைப்பாடியர் இயற்றிய

அறநெறிச்சாரம்

திரு. ஆ. பொன்னுசாமிப் பிள்ளை

உரை

1. கடவுள் வாழ்த்து

தாவின்றி எப்பொருளுங் கண்டுணர்ந்து தாமரைப்

பூவின்மேற் சென்றான் புகழடியை - நாவின்

துதித்தீண் டறநெறிச் சாரத்தைத் தோன்ற

விரிப்பன் சுருக்காய் விரைந்து

(பதவுரை) தா இன்றி-குற்றம் இல்லாமல், எப்பொருளும்- எல்லாப் பொருள்களி னியல்பையும், கண்டு உணர்ந்து-ஆராய்ந்து அறிந்து, தாமரைப் பூவின் மேல்-தாமரை மலரின் மேல், சென்றான்-சென்ற அருகனது, புகழடியை - பெயர்பெற்ற திருவடிகளை, நாவின் துதித்து-நாவினால் புகழ்ந்து, ஈண்டு-இங்கே, அறநெறிச்சாரத்தை- அறநெறிச்சாரமாகிய இந்நூலை, தோன்ற- விளங்க, சுருக்கய் விரைந்து-மிக விரைவாக, விரிப்பன்- விரித்துக் கூறுவேன்.

(குறிப்பு) இது தற்சிறப்புப்பாயிரம்; ''தெய்வ வணக்கமும் செயப்படுபொருளும் உரைப்பது'' தற்சிறப்பாகலின். தெய்வம்-வழிபடு கடவுள்; ஏற்புடைக் கடவுளும் ஆம், அறத்திற்கு முதல்வனாகலின். குற்றம்-ஐயம் திரிபுகள். காணல்-ஈண்டு ஆராய்தல்; சென்றான்: வினையாலணையும் பெயர். ''மலர் மிசை ஏகினான்'' என்றார் திருவள்ளுவனாரும.் (1)


– Act faultlessly, with pure intention.

– Examine and understand the true nature of everything.

– Remain pure and unblemished, like a lotus above the mud.

– Offer sincere praise to the Divine as the exemplar of virtue.

– Present wisdom in a concise, powerful form and share it swiftly.


2. அறவுரையின் இன்றியமையாமை

மறவுரையும் காமத் துரையும் மயங்கிய

பிறவுரையும் மல்கிய ஞாலத்-தறவுரை

கேட்கும் திருவுடை யாரே பிறவியை

நீக்கும் திருவுடையார்.

(பதவுரை) மற உரையும்-பாவத்தினை வளர்க்கும் நூல்களும், காமத்து உரையும்-ஆசையினை வளர்க்கும் நூல்களும், பிற உரையும்-பிறவற்றினை வளர்க்கும் நூல்களும், மயங்கி-கலந்து, மல்கிய- நிறைந்த, ஞாலத்து- உலகில், அறவுரை-அறத்தினை வளர்க்கும் நூல்களை, கேட்கும்-கேட்கின்ற, திரு உடையாரே-நற் பேற்றினை உடையவர்களே, பிறவியை-பிறப்பினை, நீக்கும்-நீக்குதற்கேற்ற, திருஉடையார்-வீட்டுலகினையுடையவராவர்.

(குறிப்பு) காமத்து-அத்து: சாரியை. பிறவுரை-சோம்பல் முதலியவற்றை வளர்ப்பன. உரை-ஈண்டு நூலை உணர்த்தலின் ஆகு பெயர். திரு-ஈண்டு நற்பேற்றினையும், வீட்டினையும் உணர்த்திற்று. இதனால், அறவுரை கேட்டலின் இன்றியமையாமை கூறப்பட்டது. (2)


“மறவுரையும் காமத் துரையும்”

 Texts that encourage wrongdoing or sensual indulgence distract and delude the mind.

“பிறவுரையும் மல்கிய”

 Similarly, works that foster laziness trap one in negligence.

“ஞாலத்-தறவுரை”

 In contrast, the scriptures devoted to true knowledge (ஞானம்) and righteous conduct  fill and uplift the soul.

“கேட்கும் திரு உடையார்”

 Only those of noble disposition who give ear to these virtuous teachings…

“பிறவியை நீக்கும் திருஉடையார்”

 …are capable of cutting the bonds of saṃsāra (the cycle of birth and death).

 To attain true liberation, one must shun indulgent, distracting, or sloth-promoting writings and immerse oneself wholly in texts of wisdom and Dharma. Those who do so are the ones who break free from the cycle of rebirth.

Comments